கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் பகுதியில் மாபெரும் காத்தாடி திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் நேற்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின், பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், உள்ளூர் கைவினை மற்றும் கலைப் பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் காத்தாடி திருவிழாவில் திரளான பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

