இன்று 'ரீல்ஸ்' மற்றும் இன்ஃப்ளூயன்சர்களின் காலம். ஆனால் குறுக்குவழி உங்களை முடக்கிவிடும் என்ற எச்சரிக்கையை இளைஞர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

'இந்திய குடியரசின் வெற்றி: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்' (Triumph of the Indian Republic: My Life, My Struggles) என்ற தலைப்பில் இச்சுயசரிதை நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் தொடக்ககால வாழ்க்கை, போராட்டங்கள் மற்றும் பொதுவாழ்வு அனுபவங்களை இந்நூல் விரிவாக விளக்குகிறது.

நிகழ்ச்சியில் நூலை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, இளைஞர்களுக்குப் பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கி பேசுகையில், "தலைவர்களின் சுயசரிதைகளை இளைஞர்கள் தவறாமல் வாசிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைப் அனுபவங்களையும், ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும்.

"இன்று 'ரீல்ஸ்' மற்றும் சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்களின் காலம். ஆனால் ரயில் நிலையங்களில் எழுதப்பட்டிருக்கும் 'Shortcut will cut you short' (குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்) என்ற எச்சரிக்கையை இளைஞர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்."

சூழ்நிலைகளால் தோற்கடிக்கப்படாமல், அனைத்துச் சவால்களையும் வெல்லும் உறுதி படைத்த இளைஞர்களே தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்கள். ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை இந்திய ஜனநாயகத்தின் மாபெரும் பாரம்பரிய சின்னமாகத் திகழும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது குழந்தைப் பருவ துயரங்கள், வறுமை மற்றும் பொது வாழ்வின் போராட்டங்கள் குறித்த பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதோடு, நூலை வெளியிட்ட பிரதமருக்கும் வருகை தந்த சான்றோர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.