பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 'டிராமா ரெஜிஸ்ட்ரி ஸ்டாஃப் நர்ஸ்' பணியிடத்திற்கு ஆக.27க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார முறைமை சீர்திருத்த திட்டத்தின் கீழ் (TNHSRP) 'டிராமா ரெஜிஸ்ட்ரி ஸ்டாஃப் நர்ஸ்' (Trauma Registry Staff Nurse) தற்காலிக ஒப்பந்தப் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதிகள், இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவங்களை www.kanyakumari.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 27-ஆம் தேதி (27.08.2026) மாலை 5.00 மணிக்குள்ளாக மருத்துவமனை கண்காணிப்பாளர், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பத்மநாபபுரம், கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.