சிவன் கோவில் தபசு மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விஸ்வரூப விநாயகர் சிலைக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாநகரப் பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.