» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை சிசிடிவி பதிவு!
திங்கள் 3, ஜனவரி 2022 5:29:03 PM (IST)
வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஜனவரி 31-ந்தேதிக்குள் இந்த தேர்தலை நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பொங்கலையொட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணைய விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதியின் புகழை யாரும் மறைத்திட முடியாது- மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
வியாழன் 4, ஆகஸ்ட் 2022 12:30:28 PM (IST)

கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிவிட்டது: சு. சுவாமி டுவிட்
செவ்வாய் 2, ஆகஸ்ட் 2022 4:54:03 PM (IST)

மாணவர்கள் பகுத்தறிவு பாதையில் நடைபோட்டு, தடைகளை தகர்தெறிய வேண்டும்: முதல்வர்
வெள்ளி 29, ஜூலை 2022 11:34:43 AM (IST)

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் செயல்படலாம்: ஓபிஎஸ் அறிவிப்பு
சனி 23, ஜூலை 2022 5:21:43 PM (IST)

மாவட்ட நிர்வாகம், காவல் துறை அலட்சியத்தால் பள்ளி வளாகமே போர்க்களமானது: வைகோ
திங்கள் 18, ஜூலை 2022 4:47:39 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? - சீமான்
செவ்வாய் 12, ஜூலை 2022 8:41:11 AM (IST)

MuruganJan 22, 2022 - 08:56:52 AM | Posted IP 173.2*****