» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் 74வது குடியரசு தினவிழா!

வியாழன் 26, ஜனவரி 2023 12:06:26 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 74வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. 

இக்கல்லூரியின் முதல்வர் ப. அகிலன் நமது தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மீன்வள கல்லூரியின் மாணவிகள்  சபீனா பிரிஸா மற்றும் சாதனா ஆகியோர்கள் முறையே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குடியரசுத்தினத்தை குறித்து சொற்பொழிவு ஆற்றினர். இக்கல்லூரியின் சிறந்த பணியாளர்களு்ககு விருதுகள் வழங்கப்பட்டது. 

ICAR அங்கீகாரம் பெற பணியாற்றிய கோ.அருள்ஓளி மற்றும் இரா.ஷாலினி ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி உடற்கல்வி இயக்குநர் த.நடராஜன் ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்களிடையே கைபந்து போட்டி நடத்தப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory