» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மாவடிபண்ணையில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
புதன் 25, ஜனவரி 2023 8:40:40 PM (IST)
ஆழ்வார்திருநகரி ஒன்றியம் மாவடிபண்ணை வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். வட்டாரகல்விஅலுவலர்கள டக்ளஸ் அல்பர்ட்ராஜ், ரோஸ்லின் ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாளஅட்டை பதிவுசெய்தல், பதிவைபுதுப்பித்தல், தனித்துவ அடையாள அட்டைக்கான பதிவு, போக்குவரத்து சலுகை, உபகரணங்கள் பெறபதிவு, உதவிதொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் மனநலமருத்துவர், காது மூக்குதொண்டைமருத்துவர், கண் மருத்துவர், எலும்பியல் மருத்துவர் ஆகியோர் கலந்துகொண்டு சிகிச்சைஅளித்தனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர்சுபாஜேனட்ஆனந்தி தலைமையில், ஆசிரியப் பயிற்றுனர்கள் முத்துலெட்சுமி, புனிதாராஜா, கோகிலாஆகியோர் செய்திருந்தனர்.