» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

வெள்ளி 13, ஜனவரி 2023 12:30:41 PM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி மூன்றாவது மைலில் உள்ள சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் தின விழாவினை அ.கோட்டுராஜா முன்னாள் கவுன்சிலர் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி மாவட்ட மேற்கு மண்டல தலைவர் ஆ.அன்னலெட்சுமி கோட்டுராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் பானை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ஆ.ஜெயாசண்முகம் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ் ஆசிரியை த.மணிமேகலை பொங்கல் விழா கொண்டாடுவதன் முக்கியத்துவம் பற்றி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். மாணவ, மாணவியர்கள் வேஷ்டி, சட்டை, பாவாடை தாவணியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இறைவழிபாட்டு நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டனர்.

அதன்பின் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை மேற்கு மண்டலத் தலைவர் ஆ.அன்னலெட்சுமி கோட்டுராஜா பாராட்டி பரிசுகளை வழங்கினார். நிறைவாக அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பள்ளியின் பழைய மாணவ, மாணவிகள் சங்கத்தின் செயலாளர் ரா.ச.பிரியங்கா விழாவில் கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறி நன்றியுரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியைகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory