» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாகலாபுரம் சாமி அய்யா நாடார் பள்ளி என்எஸ்எஸ் சிறப்பு முகாம்.
திங்கள் 7, நவம்பர் 2022 4:56:16 PM (IST)
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியின் என்எஸ்எஸ் சிறப்பு முகாம் இரெட்டியபட்டி கிராமத்தில் 7 நாட்கள் நடந்தது.
தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி தலைமை வகித்து சிறப்புரையாற்றி வாழ்த்தினார். முகாம் ஆசிரிய உறுப்பினர்கள் அன்பு, ஜான்ஸ்டானி முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் கவுதமன் வரவேற்றார். முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள், கிராமப் பகுதிகளில் தூய்மைப் பணி, குடிநீர் குழாய்களை சுத்தம் செய்தல், மழை நீர் சேகரிப்பு, புகையிலை ஒழிப்பு செயல்பாடு, பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம், பள்ளிவாசல்பட்டி ஊர், தெருக்கள் சுத்தம் செய்தல், மரக்கன்றுகள் நடுதல், உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.
நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ரவீந்திரன், கால்நடை மருத்துவ அதிகாரி அருண்குமார், கவுண்டன்பட்டி பஞ்., தலைவர் சமுத்திரகனி காளிமுத்து, என்.எஸ்.எஸ். மாவட்ட திட்ட அதிகாரி செல்வம், ஊர் பிரமுகர்கள் தெய்வேந்திரன், காசிராஜன், தங்கமணி, பாஸ்கரன், மாரிக்கண்ணபிரான், ஆசியர்கள் இரவிச்சந்திரன், சுரேஷ்குமார், உள்ளிட்ட பலர் மாணவர்களின் சேவையை பாராட்டினர். தொடர்ந்து கலந்து கொண்டு சேவைப்பணி செய்த மாணவ தொண்டர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கி பாராட்டினர். முகாம் உதவி அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.
G.SURESHKUMARNov 8, 2022 - 10:26:51 AM | Posted IP 162.1*****