» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கவிதை நூல் வெளியீடு
வியாழன் 30, ஜூன் 2022 10:09:17 AM (IST)
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பாக நடைபெற்ற தேசிய புள்ளியியல் தினவிழாவில் கவிதை நூல் வெளியிடப்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பாக நேற்று தேசிய புள்ளியியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான கணிதவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவ ஆசிரியர்கள் வகுப்பறையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி கொடுக்கப்பட்ட தலைப்புகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பான "கணிதவியல் 360° இரவானாலும், பகலானாலும்" என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது.
விழாவில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும் கல்லூரியின் பயின்றுனர் கழக உறுப்பினருமான தட்சிணாமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,கவிதை புத்தகத்தை வெளியிட்டு தலைமையுரை ஆற்றினார். புத்தகத்தின் முதல் பிரதியை கல்லூரி முதல்வர் கனகராஜ் பெற்றுக்கொண்டார். பேராசிரியை சாந்திதேவி கணிதமும் மழலையும் என்ற தலைப்பில் கவிதை தர மாணவ ஆசிரியர்கள் சிலர் தாங்கள் எழுதிய கவிதைகளை வாசித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
விழாவில் கல்லூரி இணைப்பேராசிரியர் இரசூல் முகைதீன் வாழ்த்துரை வழங்கினார். விழாவை மாணவ ஆசிரியர்கள் தேவநேசம், கின்ஸ்லின் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். முன்னதாக மாணவ ஆசிரியை முத்துமாரி வரவேற்புரை ஆற்றினார். இணைப் பேராசிரியை பிரேமலதா அறிமுக உரை ஆற்றினார். நிறைவாக மாணவ ஆசிரியை ஈஸ்வரி நன்றியுரை ஆற்றினார். விழா ஏற்பாடுகளை இணைபேராசிரியை பிரேமலதா, பேராசிரியை சாந்தி தேவி ஆகியோர் செய்திருந்தனர்