» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் மே தினவிழா : முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு

செவ்வாய் 3, மே 2022 3:10:18 PM (IST)



நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 48 வது ஆண்டுவிழா மற்றும் மே தினவிழா பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. முன்னாள் ஆசிரியர் தங்கராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். ஊழியர் சாலமோன் ஜெபஸ்டின் வரவேற்றார்.விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் இம்மானுவேல் அருள்தம்பி தலைமை தாங்கினார். உபதலைவர் சாமுவேல், செயலர் ஜோசப், பொருளாளர் ஸ்டீபன், இணைச்செயலாளர்கள் ஜான் சாலமோன், ஜான் தாமஸ், இம்மானுவேல் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முன்னாள் மாணவர்கள் ஸ்டீபன், சிவசங்கர் பயின்ற காலத்தில் உள்ள நினைவுகளைப் பகிர்ந்தனர். சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் குருநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்க செயலர் ஜோசப் ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக பள்ளி முதல்வர் ஸ்டீபன் நன்றியுரை ஆற்றினார். விழாவில் பள்ளியின் தாளாளர் எட்வர்ட் கண்ணப்பா முன்னிலைப் பயிற்சி மையத் தாளாளர் ஐசக் ராஜதுரை, மேலாளர் அகஸ்டின் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி சிற்றாலயத்தில் சிறப்பு ஆராதனையை குருவானவர் செல்வராஜ் நடத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory