» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் மே தினவிழா : முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
செவ்வாய் 3, மே 2022 3:10:18 PM (IST)
நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 48 வது ஆண்டுவிழா மற்றும் மே தினவிழா பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. முன்னாள் ஆசிரியர் தங்கராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். ஊழியர் சாலமோன் ஜெபஸ்டின் வரவேற்றார்.விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் இம்மானுவேல் அருள்தம்பி தலைமை தாங்கினார். உபதலைவர் சாமுவேல், செயலர் ஜோசப், பொருளாளர் ஸ்டீபன், இணைச்செயலாளர்கள் ஜான் சாலமோன், ஜான் தாமஸ், இம்மானுவேல் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவர்கள் ஸ்டீபன், சிவசங்கர் பயின்ற காலத்தில் உள்ள நினைவுகளைப் பகிர்ந்தனர். சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் குருநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்க செயலர் ஜோசப் ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக பள்ளி முதல்வர் ஸ்டீபன் நன்றியுரை ஆற்றினார். விழாவில் பள்ளியின் தாளாளர் எட்வர்ட் கண்ணப்பா முன்னிலைப் பயிற்சி மையத் தாளாளர் ஐசக் ராஜதுரை, மேலாளர் அகஸ்டின் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி சிற்றாலயத்தில் சிறப்பு ஆராதனையை குருவானவர் செல்வராஜ் நடத்தினார்.