» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி லசால் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வெள்ளி 11, மார்ச் 2022 3:33:02 PM (IST)
தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் பொருட்டு, "Lasalle Ignites 2022” என்னும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதன் துவக்க விழாவில் பள்ளி கணித ஆசிரியர் ஹெமில்ட்டன் மெல் வரவேற்புரை ஆற்றினார். புனித சவேரியார் பள்ளியின் தலைமையசிரியர் அருட்சகோ ஆரோக்கிய தாஸ் தலைமை தாங்கினார். கண்காட்சியை தூய தஸ்நேவிஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை அருட்சகோதரி சகாய மேரி துவக்கி வைத்தார். ஆசிரியர் சுஜித் நன்றியுரை வழங்கினார்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிணி அறிவியல், சமூகஅறிவியல், பொருளியல், வணிகவியல், லசால் துறவற சபையினர், ஓவியம், கைவினைத்திறன், விளையாட்டு, என ஒவ்வொரு துறையினரும், தமது படைப்புகளை கண்காட்சியில் இடம் பெறச் செய்திருந்தனர். ஒவ்வொரு துறையிலும் 50க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை தூத்துக்குடி நகர்ப்புறத்தைச் சார்ந்த பள்ளிகளைச் சார்ந்த 750க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவியரும் ஆசிரியர்களும் பார்வையிட்டனர்.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறந்த படைப்புகளைச் சமர்ப்பித்த மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை இராயப்பன் வழங்கினார். மேலும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை புனித லசால் மேல்நிலைப்பள்ளி அறிவியல் கழகமும், பள்ளியின் தாளாளர் ஆரோக்கியதாஸ், பள்ளியின் தலைமையாசிரியர் கென்னடி, பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் பிரகாசம் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் செய்திருந்தனர்.