» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

வனவிலங்கு வார ஓவியப் போட்டி: மீன்வளக் கல்லூரி மாணவன் முதல் பரிசு வென்றார்!

வியாழன் 3, மார்ச் 2022 4:48:38 PM (IST)



தூத்துக்குடியில் வனவிலங்கு வார ஓவியப் போட்டியில் மீன்வளக் கல்லூரி மாணவன் சக்திவேல் முதல் பரிசு வென்றார். 

தூத்துக்குடியில் வனவிலங்கு வாரத்தையொட்டி வனவிலங்கு பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில், 4ஆம் ஆண்டு இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் சக்திவேல், கல்லூரி பிரிவில் முதல் பரிசு பெற்றார். 

தூத்துக்குடி மாவட்ட வனவிலங்கு அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தூத்துக்குடி மாவட்ட வனவ அலுவலர் அபிஷேக் டோமர், சக்திவேலுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை இக்கல்லூரியின் முதல்வர்(பொ)  சுஜாத்குமார் மற்றும் ஊழியர்கள் பாராட்டினர். மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆதித்தன் இந்தப் போட்டியில் பங்கேற்க மாணவர்களை ஓருங்கிணைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory