» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
வனவிலங்கு வார ஓவியப் போட்டி: மீன்வளக் கல்லூரி மாணவன் முதல் பரிசு வென்றார்!
வியாழன் 3, மார்ச் 2022 4:48:38 PM (IST)
தூத்துக்குடியில் வனவிலங்கு வார ஓவியப் போட்டியில் மீன்வளக் கல்லூரி மாணவன் சக்திவேல் முதல் பரிசு வென்றார்.
தூத்துக்குடியில் வனவிலங்கு வாரத்தையொட்டி வனவிலங்கு பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில், 4ஆம் ஆண்டு இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் சக்திவேல், கல்லூரி பிரிவில் முதல் பரிசு பெற்றார்.
தூத்துக்குடி மாவட்ட வனவிலங்கு அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தூத்துக்குடி மாவட்ட வனவ அலுவலர் அபிஷேக் டோமர், சக்திவேலுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை இக்கல்லூரியின் முதல்வர்(பொ) சுஜாத்குமார் மற்றும் ஊழியர்கள் பாராட்டினர். மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆதித்தன் இந்தப் போட்டியில் பங்கேற்க மாணவர்களை ஓருங்கிணைத்தார்.