» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மனோ கல்லூரியின் புதிய முதல்வா் பொறுப்பேற்பு

வெள்ளி 25, பிப்ரவரி 2022 7:59:37 AM (IST)

நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியின் புதிய முதல்வராக காசிராஜன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரியின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்ட ஜி. காசிராஜன் பொறுப்பேற்றுக்கொண்டாா். இவா், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வணிகவியல் துறை முன்னாள் தலைவா் ஆவாா். புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜி. காசிராஜன் பேசுகையில், கிராமப்புற ஏழை மாணவா்கள் உயா்கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்கலைக்கழகம் இக்கல்லூரியைத் தொடங்கி சிறப்புடன் நடத்திவரும் நிலையில், சிறந்த மாணவா்களை உருவாக்க பாடுபடுவேன் என்றாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் இரா. சேதுராமன், வணிகவியல் துறைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, நிா்வாகவியல் துறைத் தலைவா் வேல்ராஜ், உடற்கல்வி இயக்குநா் ஈஸ்வரன், வணிகவியல் துறைப் பேராசிரியைகள் கிருஷ்ணவேணி, குமாரிசெல்வி, தமிழ்த் துறைப் பேராசிரியை பவானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory