» சினிமா » செய்திகள்
சின்னத்திரை இயக்குநரின் மனைவி தற்கொலை
வியாழன் 25, மே 2023 3:20:09 PM (IST)

சின்னத்திரை தொடர்களை இயக்கிய ஓ.என். ரத்தினத்தின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, செவ்வந்தி போன்ற தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய ஓ. என். ரத்தினம். இவர் பொள்ளாச்சியை சேர்ந்தவர். இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ரத்தினமும் பிரியாவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவர்கள்.
தற்போது கோடை விடுமுறை என்பதால், பிள்ளைகள் இருவரும் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், கணவன் - மனைவி இடையே சிறிய குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில், ஊரிலிருந்து வந்த மகன்களை அழைத்து வர ரத்தினம் பேருந்து நிலையம் சென்றிருந்த நேரத்தில், பிரியா வீட்டுக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
மகன்களுடன் வீட்டுக்கு வந்த ரத்தினம், பிரியா தற்கொலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து கதறி அழுதுள்ளார். உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். இது பற்றி நண்பர்களும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி பிரியா திருமணம் செய்து கொண்டதாகவும், இவர்கள் மனம் ஒத்த தம்பதிகளாகவே இருந்ததாகவும, ஏதோ ஒரு சின்ன சண்டையில் இந்த விபரீத முடிவை பிரியா எடுத்துவிட்டாரே என்றும் நண்பர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பிரியாவின் மறைவுக்கு, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகும் ரஜினியின் எந்திரன்!
வியாழன் 1, ஜூன் 2023 5:19:32 PM (IST)

கிராஃபிக் டிசைனரை கரம்பிடித்தார் கே.பி.ஓய். தீனா!!
வியாழன் 1, ஜூன் 2023 5:14:18 PM (IST)

பிரபுதேவாவின் புதிய படம் டைட்டில் அறிவிப்பு!
வியாழன் 1, ஜூன் 2023 12:05:17 PM (IST)

படப்பிடிப்பில் மின்னல் தாக்கி விபத்து: அதிர்ஷ்டவசமாக 5 லைட்மேன்கள் உயிர் தப்பினர்
வியாழன் 1, ஜூன் 2023 12:03:00 PM (IST)

சர்வதேச இந்திய திரைப்பட விழா: கமல்ஹாசன், மாதவனுக்கு விருது!!
செவ்வாய் 30, மே 2023 12:54:59 PM (IST)

நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுதாகர்
சனி 27, மே 2023 3:41:24 PM (IST)
