» சினிமா » செய்திகள்

சூர்யா நடிப்பில் இரும்புக்கை மாயாவி: லோகேஷ் கனகராஜ் தகவல்

புதன் 10, ஆகஸ்ட் 2022 12:06:44 PM (IST)

சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி படத்தை உறுதியாக இயக்குவேன் என டைரக்டர் லோகேஷ் கனகராஜ் கூறினார். 

மாநகரம் படத்துக்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தைதான் லோகேஷ் கனகராஜ் இயக்க இருந்தார். இதற்காக சூர்யாவிடம் அவர் ஒரு கதையை சொன்னார். அந்த கதை பிடித்திருந்தாலும் சில காரணங்களால் அந்த படம் உடனே தொடங்கவில்லை. அந்த படத்துக்கு இரும்புக்கை மாயாவி என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளை கவரும் விதமான ஃபேன்டஸி நிறைந்த திரில்லர் கதையாக இதை லோகேஷ் எழுதியிருந்தார்.

இதையடுத்து இந்த படத்துக்கு பதிலாக கார்த்தி நடிப்பில் கைதி படத்தை லோகேஷ் இயக்கி முடித்தார். இந்நிலையில் சூர்யாவை வைத்து படம் இயக்கும் திட்டம் கைவிடப்படவில்லை என லோகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, ‘4 வருடங்களுக்கு முன்பு இரும்புக்கை மாயாவி படத்தின் கதையை சூர்யாவுக்கு சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தாலும் பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் அந்த படத்தை உடனே உருவாக்க முடியவில்லை. 

அந்த படத்தின் திரைக்கதையை கடந்த 4 வருடமாகவே மெருகூட்டும் பணி நடந்து வருகிறது. அந்த படம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். கைதி 2 படமும் அதுபோல் ஸ்கிரிப்ட் பணிகள் முழுமை பெறாமல் இருக்கிறது. இதில் எது முதலில் தொடங்கும் என தெரியவில்லை. ஆனால் இரும்புக்கை மாயாவி படம் கைவிடப்படவில்லை’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory