» சினிமா » செய்திகள்

இயக்குநர் அருண்ராஜா அருமை புரிந்தது: உதயநிதி

திங்கள் 11, ஜூலை 2022 4:24:48 PM (IST)



இயக்குநர் அருண்ராஜா அருமை புரிந்தது என்று நெஞ்சுக்கு நீதி படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நெஞ்சுக்கு நீதி படத்தின் 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய உதயநிதி, நடிப்பை நிறுத்தவேண்டாம் என பலரும் கோரிய நிலையில், மாமன்னன் படத்திற்கு பிறகு மற்றொரு படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறேன். இந்தப் படத்தையும் இயக்குநர் அருண்ராஜா காமாராஜ் தான் இயக்குவார் என நம்புகிறேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

நெஞ்சுக்கு நீதி படத்தின்போது, ஏன்டா இந்தப் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டோம் என்ற அளவிற்கு சிரிக்கக் கூடாது எனக் கூறியது மட்டுமில்லாமல், கண்ணைக்கூட சிமிட்டக் கூடாது என அருண் ராஜா மிகவும் கண்டிப்புடன் இருந்தார். பிறகு மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்தேன். அந்தப் படப்பிடிப்பின்போது, 50, 60 டேக் எடுத்தேன். அப்போதுதான் அருண்ராஜா அருமை புரிந்தது. நல்லபடியாக இந்தப் படத்தை செய்து கொடுத்தார் அருண். நன்றி என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory