» சினிமா » செய்திகள்

ஆன்மிக பயணமாக இந்தியா வந்துள்ள வில் ஸ்மித்!

திங்கள் 25, ஏப்ரல் 2022 10:22:59 AM (IST)



ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், ஆன்மிக பயணமாக மீண்டும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் 

ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த சர்ச்சையில் சிக்கியிருந்தார் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து உருவக் கேலியாக பேசினார். முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் அலோபீசியா என்ற நோய் தோற்றால் பிங்கெட் போராடி வருவதை கேலி பேசியதால் அவரை தாக்கினார் வில் ஸ்மித்.

இந்த விவகாரத்தில் நடிகர் வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட, சர்ச்சை முடிவுக்கு வந்தது. தொடர்ந்து வில் ஸ்மித் இந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்கவும் செய்தார்.

இதனிடையே, வில் ஸ்மித் தற்போது இந்தியா வந்துள்ளார். மும்பை வந்த அவர், அங்கு உலா வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நேற்று காலை மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய வில் ஸ்மித், நவி மும்பை பகுதியில் உள்ள இஸ்கான் கோவில் ஒன்றில் பூஜைகளில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை இஸ்கான் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொள்ளும் வில் ஸ்மித், அதன்பின் ஆன்மிக தியானத்திலும் ஈடுபடவுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர், இந்தியா வருவது இது முதல் முறை கிடையாது. 2019ல் இதேபோல் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஒன்றிற்காக இந்தியா வந்திருந்தவர், அப்போது ஹரித்துவார் சென்று வழிபட்ட நிகழ்வும் நடந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory