» சினிமா » செய்திகள்

நான் பாஜகவில் இல்லை: இயக்குநர் பாக்யராஜ் விளக்கம்!

வியாழன் 21, ஏப்ரல் 2022 12:49:22 PM (IST)

குறைப்பிரசவம் தொடர்பான பேச்சுக்கு இயக்குநர் பாக்யராஜ் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், தான் பாஜகவில் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், "பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்கள் சென்றாலும் ஒய்வில்லாமல் நாட்டுக்காக உழைக்கிறார். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. 

அதனால், விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை. இந்தியாவுக்கு மோடி போன்ற பிரதமர்தான் தேவை. ஆனால், பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய எப்போதுமே சிலர் தயாராக உள்ளனர். மோடி ஜி-க்கு நான் ஓர் ஆலோசனை வழங்குகிறேன். உங்களை விமர்சிப்பவர்களை குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். உங்களைத் தவறாக விமர்சனம் செய்பவர்களுக்கு வாயும் சரியாக இயங்கவில்லை.. காதும் சரியாக கேட்கவில்லை” என்று கூறினார்.

இதையடுத்து, இயக்குநர் பாக்யராஜ் இந்தக் கருத்துக்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. சமூக வலைதளங்களில் அவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், தனது கருத்துக்கு பாக்யராஜ் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், "குறைப்பிரசவம் என்று நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. புண்படுத்தும் நோக்கில் அதனை கூறவில்லை. கிராமங்களில் விமர்சிக்க கூறப்படும் சொல்லாடல் அது.

எனினும், நான் கூறியது யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் பாஜகவை சேர்ந்தவன் அல்ல. திராவிட தலைவர்களை பார்த்தே நான் வளர்ந்தேன். என்னுடைய சினிமாவிலும் திராவிட இயக்கத் தலைவர்களின் கருத்து இருக்கும். என்னை அறியாமல் திராவிட கருத்துகள்தான் என் மனதில் இருக்கும். 30 வருடங்களுக்கு முன்னரே என்னுடைய படங்களில் சாதி போன்றவை இருக்கக் கூடாது என்ற திராவிட கருத்துகள்தான் வந்திருக்கிறது. இனியும் அது தொடரும். இதுதான் கடைசிவரை என் படங்களில் எதிரொலிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ராஜாApr 21, 2022 - 12:51:13 PM | Posted IP 173.2*****

அந்த பயம் இருக்கனும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory