» சினிமா » செய்திகள்

அமிதாப் பச்சனை கண்கலங்க வைத்த சூர்யாவின் பாடல்!

சனி 4, செப்டம்பர் 2021 5:48:17 PM (IST)



சூரரைப்போற்று படத்தின் ‘கையிலே ஆகாசம்’ பாடல் தன்னை கண்கலங்க வைத்ததாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். 

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. சமீபத்தில் நடந்த மெல்பெர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்தன. 

இந்நிலையில், சூரரைப்போற்று படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெறும் ‘கையிலே ஆகாசம்’ பார்த்தபோது தன்னால் உணர்ச்சிகளை கட்டுப்பத்த முடியவில்லை என்றும், தன்னை மீறி கண்ணீர் விட்டதாகவும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நடிகர் சூர்யாவை தென்னிந்திய சூப்பர் ஸ்டார் எனவும் புகழாரம் சூட்டி உள்ளார். ‘கையிலே ஆகாசம்’ பாடல் பார்த்து பாராட்டிய நடிகர் அமிதாப் பச்சனுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory