» சினிமா » செய்திகள்

போதைப்பொருள் வழக்கு: ரகுல் பிரீத்சிங், சார்மி, ராணாவுக்கு சம்மன்

வெள்ளி 27, ஆகஸ்ட் 2021 3:35:48 PM (IST)



போதைப்பொருள் வழக்கில் ராணா, ரகுல் பிரீத்சிங், சார்மி, உள்பட தெலுங்கு திரைப்பட துறையை சேர்ந்த 12 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தெலுங்கு பட உலகில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த புகாரில் போதை பொருள் தடுப்பு போலீசார் 2017-ல் விசாரணை நடத்தி தென்னாப்பிரிக்காவை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரர் கெல்வின் என்பவரை கைது செய்தனர். ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதை பொருளையும் பறிமுதல் செய்தனர்.பியூஸ் என்பவர் மூலம் நடிகர்-நடிகைகளுக்கு போதை பொருள் விற்கப்பட்டதாக கெல்வின் வாக்குமூலம் அளித்தார். 

இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 11 பேர் தெலுங்கு சினிமா துறைக்கு நெருக்கமானவர்கள். 62 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போதை பொருள் வழக்கில் பல கோடிகள் கைமாறியது தெரியவந்ததால் அமலாக்கத் துறையும் தனியாக விசாரணை நடத்தியது. 

இந்நிலையில் தெலுங்கு நடிகைகள் ரகுல்பிரீத் சிங், சார்மி, முமைத்கான், தெலுங்கு நடிகர்கள் ராணா, ரவிதேஜா, நவ்தீப், இயக்குனர் பூரி ஜெகன்நாத் உள்பட திரைப்பட துறையை சேர்ந்த 12 பேருக்கு அமலாக்கத்துறை தற்போது சம்மன் அனுப்பி உள்ளது.ரகுல் பிரீத் சிங் அடுத்த மாதம் 6-ந் தேதியும், ராணா 8-ந் தேதியும், ரவிதேஜா 9-ந் தேதியும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் யாரும் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் இதுவரை சேர்க்கப்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory