» சினிமா » செய்திகள்

அனுமதி பெறாமல் படப்பிடிப்பு: சிவகார்த்திகேயனின் படக்குழுவுக்கு அபராதம்

செவ்வாய் 10, ஆகஸ்ட் 2021 8:46:43 AM (IST)

ஆனைமலை முக்கோணம் பகுதியில்நடந்த சினிமா படப்பிடிப்பை காண நூற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலின்றி கூடியதால் நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் மற்றும்ஆற்றுப்பாலம் பகுதியில் நேற்று மதியம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தின், படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு நடக்கும் தகவலறிந்து, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆற்றுப்பாலத்தின்இருபக்கமும், முக்கோணம் பகுதியிலும், சமூக விலகலின்றி கூட்டமாக திரண்டனர். இதனால், பலருக்கும் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.

மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்து போலீஸார் கூட்டத்தை கலைத்தனர். படப்பிடிப்பு தொடர்ந்து நடந்ததால் நிலைமையை சரிசெய்ய, வால்பாறை டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் ஆனைமலை வட்டாட்சியர் விஜயகுமார் சம்பவ இடத்துக்குவந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததால் கரோனா பரவலை கட்டுப்படுத்த படப்பிடிப்பைநிறுத்தப்பட்டது.

விசாரணையில் முறையாக அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி மற்றும் படகுழுவினர் 18 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். படகுழுவுக்கு வருவாய்துறையினர் ரூ.19,400 அபராதம் விதித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory