» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மகளிர் ஐபிஎல்: கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!

திங்கள் 27, மார்ச் 2023 12:33:49 PM (IST)



மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. 

மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பாண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், முதல் சீசனில் கோப்பையை வென்றுள்ளது மும்பை அணி. இறுதிப் போட்டியில் இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை ப்ராபோன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி அணியின் தொடக்க வீராங்கனை ஷெபாலி வர்மா 11 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ஆலிஸ் கேப்ஸி ரன் ஏதும் எடுக்காமலும், ஜெமிமா ரோட்ரிகஸ் 9 ரன்னிலும் வெளியேறினர். இதனால் 35 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாறத் தொடங்கியது. அடுத்து இணைந்த மேரிசன் கேப் – கேப்டன் மெக் லேனிங் இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்து விளையாடியது. மெக் லேனிங் 35 எடுத்து ஆட்டமிழக்க மேரிசன் கேப் 18 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் களத்தில் இறங்கிய ஜெஸ் ஜோனசன் 2 ரன்னும், அருந்ததி ரெட்டி ரன் ஏதும் எடுக்காமலும், மின்னு மணி 1 ரன்னும், தனியா பாட்டியா ரன் ஏதும் எடுக்காமம் வெளியேறினர். 79 ரன்னுக்கு 9 விக்கெட் என்ற நிலையில் டெல்லிஇருந்தபோது, கடைசி விக்கெட்டிற்கு ஷிகா பாண்டே – ராதா யாதவ் இணை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அதிரடி ஆட்டத்தில் இறங்கியதால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் தலா 27 ரன்களை குவிக்க டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து  131 ரன்கள் எடுத்தது. ஷிகா பாண்டே – ராதா யாதவ் ஆகியோர் கடைசி விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதன்பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடத் தொடங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஹேலி மேத்யூஸ் 13 ரன்னும்,  யஸ்திகா பாட்டியா 4 ரன்னும் எடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து இணைந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் - நேட் சிவர் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

அணி 92 ரன்கள் இருந்தபோது கேப்டன் கவுர் 37 ரன்களில் வெளியேறினார். அடுத்து இணைந்த நேட் சிவர் - மெலி கெர் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது. நேட் சிவர் 60 ரன்னுடனும், மெலி கெர் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் மும்பை அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory