» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பாகிஸ்தானுக்கு வராவிட்டால் இந்திய அணி மீது நடவடிக்கை: ஜாவித் மியான்டட் கோரிக்கை!
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 4:43:25 PM (IST)

பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் இந்தியா மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாக். முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் வலியுறுத்தியுள்ளார்.
6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பை விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியாவை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் எங்களுக்கு கவலை இல்லை. நான் இதை எப்போதும் சொல்லி வருகிறேன். எங்களிடம் போட்டியை நடத்தும் உரிமை இருக்கிறது. இது போன்ற விஷயங்களை கட்டுப்படுத்துவது ஐ.சி.சி.யின் வேலையாகும். அப்படி செய்யவில்லை என்றால் ஐ.சி.சி.யால் எந்த அர்த்தமும் இல்லை.
ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லா அணிகளும் செல்ல வேண்டும். எல்லா நாட்டுக்கும் ஒரு விதியை வைத்திருக்க வேண்டும். அணிகள் விளையாட மறுத்தால் அவர்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் ஐ.சி.சி. அவர்களை நீக்க வேண்டும். பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா பயப்படுவது ஏன்? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டு விடமாட்டார்கள் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியும். பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் ஐ.சி.சி. தலையிட்டு இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜாவித் மியான்டட் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் வண்ணமயமான தொடக்க விழா: முதல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி!
சனி 1, ஏப்ரல் 2023 3:09:53 PM (IST)

ஐபிஎல் 2023 தொடரில் 5 புதிய விதிகள் அறிமுகம்
வெள்ளி 31, மார்ச் 2023 10:33:17 AM (IST)

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: சிறந்த அணியாக இந்தியா தேர்வு
செவ்வாய் 28, மார்ச் 2023 3:58:44 PM (IST)

மின்னோளி கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி!!
செவ்வாய் 28, மார்ச் 2023 11:17:01 AM (IST)

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியீடு: பண்ட் தக்கவைப்பு...!
திங்கள் 27, மார்ச் 2023 4:30:23 PM (IST)

மகளிர் ஐபிஎல்: கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!
திங்கள் 27, மார்ச் 2023 12:33:49 PM (IST)

அங்கே என்ன சத்தம்?Feb 8, 2023 - 10:44:32 AM | Posted IP 162.1*****