» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது: ஜனாதிபதி வழங்கினார்
வியாழன் 1, டிசம்பர் 2022 12:14:44 PM (IST)

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே போல் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருது, 4 பேருக்கு துரோணாச்சார்யா விருது, 4 பேருக்கு தியான்சந்த் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் திருச்செந்தூர் மாணவர்கள் சாதனை
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:09:31 AM (IST)

தூத்துக்குடியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள்
திங்கள் 30, ஜனவரி 2023 3:24:51 PM (IST)

எந்த ஒரு பேட்ஸ்மேனும் சிக்சர் அடிக்காத டி20 போட்டி : இந்தியா போராடி வெற்றி!
திங்கள் 30, ஜனவரி 2023 12:03:12 PM (IST)

ஐசிசி யு-19 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை!
திங்கள் 30, ஜனவரி 2023 11:58:18 AM (IST)

அட்டகாச விரட்டல்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
திங்கள் 30, ஜனவரி 2023 10:58:51 AM (IST)

ஆடுகளத்தை சரியாக கணிக்காததால் தோல்வி: இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா
சனி 28, ஜனவரி 2023 12:08:30 PM (IST)
