» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆல்ரவுண்டர் பாண்டியா அசத்தல் : முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வென்றது இந்தியா!!

வெள்ளி 8, ஜூலை 2022 12:05:48 PM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

செளதாம்ப்டனில் நடைபெற்ற பகலிரவு ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். ரோஹித் சர்மா 24, ஹூடா 33, சூர்யகுமார் யாதவ் 39 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியாவும் அபாரமாக பேட்டிங் செய்து 33 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. ஜார்டன், மொயீன் அலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து கேப்டன் பட்லரை முதல் பந்திலேயே அற்புதமான பந்தால் போல்ட் செய்தார் புவனேஸ்வர் குமார். இங்கிலாந்து அணி முதல் 6 ஓவர்களில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பாண்டியா பந்துவீச்சிலும் திறமையாகச் செயல்பட்டு விக்கெட்டுகள் எடுத்தார். 10 ஓவர்களின் முடிவில் 72/4 என இருந்ததால் நெருக்கடியை எதிர்கொண்டது இங்கிலாந்து. 

13-வது ஓவரில் ஹேரி புரூக், மொயீன் அலி என நன்கு விளையாடி வந்த பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் சஹால். கடைசியில் இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங், பந்துவீச்சில் அசத்தியதால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 2-வது டி20 ஆட்டம் பிர்மிங்கமில் நாளை நடைபெறுகிறது. இந்திய நேரம் இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory