» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஒலிம்பிக் குத்துச் சண்டை: இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்
புதன் 4, ஆகஸ்ட் 2021 12:36:51 PM (IST)
ஒலிம்பிக் குத்துச் சண்டை அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பெண்கள் குத்துசண்டை 69 கிலோ - இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் அரை யிறுதிக்கு தகுதி பெற்று இருந்தார். முதல்நிலை வீராங்கனையான துருக்கி நாட்டின் சுர்மெனெலியுடன் அரையிறுதிப் போட்டியில் லவ்லினா மோதினார். முதல் சுற்றில் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கிய சுர்மெலிக்கு 5 நடுவர்களும் 10 புள்ளிகள் அளித்தனர்.இரண்டாவது சுற்றிலும் அவரது செல்வாக்குத் தொடர்ந்தது.
காலிறுதிப் போட்டியில், லவ்லினா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சீன தைபேயின் நியான் சின் சேன்னைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்து உள்ளது.பதக்கம் வெல்லும் மூன்றாவது பெண் லவ்லினா 23 வயதான லவ்லினா அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்; அர்ஜூனா விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது.