» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி
புதன் 4, ஆகஸ்ட் 2021 12:07:58 PM (IST)
டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தம் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் வில் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற மல்யுத்தம் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் தீபக் புனியா 6-3 என்ற கணக்கில் சீனாவின் லின் சூசனை வீழ்த்தினார். மேலும், 57 கிலோ மல்யுத்த பிரிவில் ரவிக்குமார் தஹியாவும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். காலிறுதியில் ரவிக்குமார் தஹியா 14-4 என்ற கணக்கில் பல்கேரிய வீரர் வான்க்ளோவை வீழ்த்தினார்.