» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டி: இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி!
செவ்வாய் 27, ஜூலை 2021 12:02:16 PM (IST)
ஒலிம்பிக் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த நாடின் அபெட்ஸ்-ஸை தோற்கடித்து அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.