» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு நியமன ஆணை: சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
சனி 10, ஜனவரி 2026 4:31:25 PM (IST)

திருநெல்வேலியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு பணிநியமன ஆணைகளை பேரவைத் தலைவர் மு.அப்பாவு, வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தூய யோவான் கல்லூரி இணைந்து நடத்திய மாபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், கிறிஸ்துவ தேவாலையங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்தியானந்த் முன்னிலையில் இன்று (10.01.2026) வழங்கினார்.
இன்று நடைபெற்ற முகாமில் 106 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டது. 2,339 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர், அவர்களில் 635 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அந்தோனி, ஜெப்ரின், தூய யோவான் கல்லூரி முதல்வர் சுதாகர் ஐசக், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் க.இசக்கிபாண்டியன், முக்கிய பிரமுகர்கள் ஜோசப் பெல்சி, அலெக்ஸ் அப்பாவு, பரமசிவன் ஐயப்பன், சித்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை : சிவகார்த்திகேயன்
புதன் 14, ஜனவரி 2026 5:06:41 PM (IST)

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு: அன்பில் மகேஷ் அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 5:01:38 PM (IST)

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)








