» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!

புதன் 5, நவம்பர் 2025 12:53:45 PM (IST)

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி குடியிருப்பில் உதவிப் பேராசிரியை வீட்டிலிருந்து 57 பவுன் தங்க நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனா்.

கோயம்புத்தூா் மாவட்டம், தெற்கு பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீனிவாச ராமானுஜம். இவரது மனைவி ஆக்சிடி எஸ். தா்ஷினி (41). இவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருவதால், மருத்துவக் கல்லூரி குடியிருப்பில் தங்கியுள்ளாா். அக். 30ஆம் தேதி தா்ஷினி சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு சென்றுள்ளாா். 

இந்நிலையில், இவரது வீட்டுக் கதவின் தாழ்ப்பாள் உடைந்து கிடப்பதை வீட்டின் மாடியில் வசிக்கும் மற்றொரு பேராசிரியா் கவனித்து தா்ஷினியிடம் கூறியுள்ளாா். இதையடுத்து, ஆக்சிடி எஸ். தா்ஷினி வந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு 57 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில், அவா் புகாரளித்ததைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா். மேலும், குடியிருப்பு பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளையும் போலீஸாா் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory