» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொடைக்கானலில் 6வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு
வியாழன் 31, ஜூலை 2025 3:51:35 PM (IST)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மது இன்ஸ்டிடூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அன்டு ரிசர்ச் சென்டர் சார்பாக 6-வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு வெ.பரத் தலைமையில் நடைபெற்றது.
நீதிபதி சேகர், மாவட்ட கல்வி ஆய்வாளர் ஓய்வு அமுதா, நேச்சுரோபதி. சுபிதா, வைத்தியநாதன், லக்ட்சயா, எம்.ஐ.எம்.எஸ் இயக்குநர் க.சேதுசுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மருத்துவர் ஆரோக்கியபழம் வரவேற்புரையாற்றினார். எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தைப் பற்றிய புதிய புத்தகம் நீதிபதி சேகர் எம்.ஐ.எம்.எஸ், மாணவர்களின் சார்பாக வெளியிட, எம்.ஐ.எம்.எஸ் கல்வி நிறுவனத்தின் சேர்மன் வெ.பரத் பெற்றுக்கொண்டார். நீதிபதி சேகர், அமுதா பொதுநல சேவையைப் பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பின்னர் பரத் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எம்.ஐ.எம்.எஸ் கல்வி நிறுவனமானது கடந்த 7 வருடங்களாக எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தை மத்திய சுகாதாரத்துறையின் அனுமதியுடன் ஆராய்ச்சி செய்து வருகிறது. கொரோனா தொற்று காலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சையளித்தது மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கு இம்யூனிட்டி பூஸ்டரும் வழங்கப்பட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது மட்டுமில்லாமல் பல்வேறு விருதுகளை பெற்றது. இந்தியாவில் எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தை சரியான பாதையில் எம்.ஐ.எம்.எஸ் எடுத்து செல்கிறது. இந்த மருத்துவத்திற்கு மத்திய மாநில சுகாதாரத்துறையில் முறையான அங்கீகாரம் கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்போம்.
பக்கவிளைவுகள் இல்லாத எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவம் ஆராய்ச்சியோடு மட்டுமில்லாமல் முறையான அங்கீகாரம் கிடைத்தால் பல்வேறு மக்கள் பலனடையலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கவனத்திற்கும் இந்த மருத்துவத்தை பற்றி எடுத்து கூறியிருக்கிறோம். விரைவாக இந்த மருத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம் என்று கூறினார். மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். முடிவில் யூசப் மௌலானா ஆம்புரோஸ் ஆகியோர் நன்றியுரை கூறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கவே விஜய் களமிறங்கியுள்ளார் : நயினார் நாகேந்திரன்
சனி 11, ஏப்ரல் 2026 5:47:26 PM (IST)

தமிழக உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் அதிரடி மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 5:37:39 PM (IST)

நெல்லையில் 15 நாட்கள் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: ஏப்ரல் 17-ல் தொடக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 5:13:32 PM (IST)

இலவசங்களுக்கு நிதி எங்கிருந்து வரும்? கட்சிகள் விளக்கமளிக்க வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 4:17:05 PM (IST)

உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:50:15 PM (IST)

ஜனநாயகன் பட விவகாரம்: சிபிஐ விசாரணை கோரத் தயாரா? விஜய்க்கு பாஜக சவால்!
சனி 11, ஏப்ரல் 2026 3:29:40 PM (IST)







