» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பல பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டு கூட்டணியில் நீடிக்கிறோம்: திருமாவளவன் பரபரப்பு பேச்சு
வியாழன் 19, ஜூன் 2025 12:26:12 PM (IST)
பல பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டுதான் ஆளுங்கட்சி கூட்டணியில் நீடிக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டணியில் இருக்க வேண்டும் என கேட்பது சராசரி மனிதனின் சிந்தனை. அரசியல் களத்தில் அது சரிவராது. அரசியலில் நாம் இருக்கும்போது எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு பிரச்சனையை கவனத்தில் கொண்டு மட்டும் நாம் செயல்பட முடியாது.
அரசியலில் தெளிவு, பொறுமை, நிதானம், சகிப்புதன்மை தேவை. நமக்கு ஆதரவான சக்திகள் யார்? எதிரான சக்திகள் யார்? என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும். அதனால் தான் பா.ஜ.க., பா.ம.க. கட்சிகள் இடம்பெறும் அணிகளில் நாம் சேர மாட்டோம் என தெளிவாக முடிவெடுத்துள்ளோம்.
அ.தி.மு.க.வோடு சேருவீர்களா? சேரலாம். பிரச்சனை இல்லை. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் இருப்பதால் அது முடியாது. இப்படி கதவுகளை எல்லாம் மூடி வைத்துக்கொண்டால் யார் கூட்டணிக்கு அழைப்பார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். எதையும் எதிர்பார்த்து, யாரையும் மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் அதற்காக கட்சி தொடங்கவில்லை. அம்பேத்கரின் அரசியலை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே கட்சியை தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)

புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: அதிகாரிகள் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:12:38 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 38 மாவட்டங்களில் முகாம்: முதல்வர் துவக்கி வைத்தார்
செவ்வாய் 15, ஜூலை 2025 11:51:28 AM (IST)

பள்ளி குடிநீா் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: 3 பேரிடம் போலீஸ் விசாரணை
செவ்வாய் 15, ஜூலை 2025 11:16:33 AM (IST)

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 10:57:56 AM (IST)

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
செவ்வாய் 15, ஜூலை 2025 10:33:29 AM (IST)
