» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனியார் தொழிற்சாலையில் காவலாளி கொலை : தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்
வெள்ளி 9, மே 2025 5:13:33 PM (IST)
விருதுநகர் அருகே தனியார் தொழிற்சாலையில் காவலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட செவ்வல்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வாட்ச்மேனாக சுந்தரராஜ் மகன் மோகன்ராஜ் (55) என்றவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5ம் தேதி இரவு பணியில் இருந்த போது யாரோ மர்ம ஆசாமிகள் இவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவரை கொலை செய்தவர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இறந்த மோகன்ராஜ் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அல்லது கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரியவருகிறது. மேலும் இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் சாத்தூர் டிஎஸ்பி 949810484 வெம்பக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் 9498196111 ஆகிய நம்பருக்கு தொடர்பு கொள்ளும்படி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் யார்? முழு விவரம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:23:08 PM (IST)

ஒட்டுமொத்த தமிழக மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: இ.பி.எஸ் கடும் தாக்கு!
வியாழன் 5, மார்ச் 2026 3:14:09 PM (IST)

திமுக - காங்கிரஸ் கூட்டணி புதிய வரலாறு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:23:06 AM (IST)









