» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:39:59 AM (IST)
பூந்தமல்லி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு நேற்றிரவு 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்ட பின்னர் உணவிற்கு பணம் கேட்ட நிலையில், அவர்கள் பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உணவக உரிமையாளர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும், ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மூன்று பேரும் ஒரே இரவில் வெவ்வேறு இடங்களில் மூன்று பேரை வெட்டி பணத்தைப் பறித்தது தெரியவந்துள்ளது. அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய இடங்களிலும் அரிவாளால் வெட்டி பணம் பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 26, மார்ச் 2025 10:26:51 AM (IST)

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
புதன் 26, மார்ச் 2025 8:06:49 AM (IST)

லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு தலா 3 ஆண்டு சிறை: 12 ஆண்டுகளாக நடந்த வழக்கில் தீர்ப்பு!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:47:50 PM (IST)

குமரி மாவட்டத்திற்கு ரூ.13.32 கோடி நிதி ஒதுக்கீடு : முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி!
செவ்வாய் 25, மார்ச் 2025 7:43:51 PM (IST)

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

கோவளத்தில் மகளிர் பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்
செவ்வாய் 25, மார்ச் 2025 4:41:51 PM (IST)
