» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் புற்றுநோய் தின கருத்தரங்கம்!!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:13:34 PM (IST)

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் விலங்கியல் துறை மற்றும் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பில் புற்றுநோய் தின கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதுகலை விலங்கியல் துறைத் தலைவர் எம்.ஐ. டிலைட்டா மனோ ஜாய்ஸ் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் எஸ்.எம். அப்துல் காதர், துணை முதல்வர் எஸ். எம். ஏ. சையது முகமது காஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திருநெல்வேலி அரசு அருங்காட்சியத்தின் காப்பாளர் வி. சிவகுமார் கருத்தரங்கின் சிறப்புகள் குறித்து பேசினார். ஜே. சிபா வான்மதி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
கருத்தரங்கில் திருவனந்தபுரம், கேரளா, பேலியம் இந்தியா அமைப்பின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சித் துறையின் குழுத் தலைவர் மருத்துவர் S. ஹஸ்மத் பர்ஹானா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புற்றுநோய்க்கான "பேலியேடிவ் கேர்” என்ற தலைப்பில் புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய்களின் தாக்கத்தால் அவதிப்படும் பாதிப்பாளர்களுக்கு அளிக்க வேண்டிய சேவைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்கள் தன்னார்வலர்கள்களாக முன் வர வலியுறுத்தியும் சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் துறைத் தலைவருமான எம் சித்தி ஜமீலா மாணவர்களிடையே மனித சேவையின் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினார். முன்னதாக நடைபெற்ற உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு போட்டிகளான கருத்தோவியே போட்டி, உணவு தயாரித்தல் போட்டி மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டியும் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தர கட்டுப்பாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீப், துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முகமது ரோசன் கலந்து மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பி. எஸ் பென்சி நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
புதன் 26, மார்ச் 2025 8:06:49 AM (IST)

லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு தலா 3 ஆண்டு சிறை: 12 ஆண்டுகளாக நடந்த வழக்கில் தீர்ப்பு!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:47:50 PM (IST)

குமரி மாவட்டத்திற்கு ரூ.13.32 கோடி நிதி ஒதுக்கீடு : முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி!
செவ்வாய் 25, மார்ச் 2025 7:43:51 PM (IST)

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

கோவளத்தில் மகளிர் பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்
செவ்வாய் 25, மார்ச் 2025 4:41:51 PM (IST)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)
