» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி திருக்கோவில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு திருத் தேரோட்டம்!
திங்கள் 13, ஜனவரி 2025 11:13:01 AM (IST)

வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை சமேத அருள்மிகு பூமிநாதர் சுவாமி திருக்கோவில் திருத் தேரோட்டம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம் வீரவநல்லூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீமரகதாம்பிகை சமேத அருள்மிகு பூமிநாதர் சுவாமி திருக்கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (12.01.2025) நடைபெற்ற திருத் தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் சேரன்மகாதேவி சார்ஆட்சியர் அர்பித் ஜெயின் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற பேரவைத்தலைவர் இரா.ஆவுடையப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வீரவநல்லூர் அருள்தரும் ஸ்ரீமரகதாம்பிகை சமேத அருள்மிகு பூமிநாதர் சுவாமி திருக்கோவில் மிகவும் பழமையான சிவாலயம் ஆகும். இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாத திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாவில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி திருவீதி உலாவும் நடைபெருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில் பெரிய தேரானது கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்தது. அதனை தொடர்ந்து தேர் சீரமைக்கப்பட்ட போதும், அந்த தேரை வடம் பிடித்து இலுத்து செல்ல தகுந்த சாலை வசதி இல்லாததால் தேர் ஒடாமல் இருந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களிடம் இதுகுறித்து கொண்டு சென்றதன் காரணமாக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உத்தரவுகள் வழங்கப்பட்டது.
கோவிலை சுற்றி தேர் செல்லும் சாலை சுமார் 700 மீட்டர் நீளமுள்ள சாலையின் இரு புறமும் வாறுகால் அமைத்தும், இரண்டு பாலங்கள் கட்டியும், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, தரமான சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி வட்டாட்சியர் வின்சென்ட், வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, துணைத் தலைவர் வசந்த சந்திரா உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: தலைமை டி.ஜி.பி.யை நியமிக்க இபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:27:41 AM (IST)

உண்டியலை உடைத்தபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் கொள்ளையன் ஓட்டம்!!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:30:20 AM (IST)

கட்சி தொடங்கியவுடன் முதல்-அமைச்சர் ஆகவில்லை: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:28:06 AM (IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:20:41 AM (IST)

மோசடி வழக்கில் சிறிய தொகைக்காக வங்கிக்கணக்கை ஒட்டுமொத்தமாக முடக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:18:45 AM (IST)

ஆசிரியைகளிடம் 160 பவுன், ரூ.31½ லட்சம் நூதன மோசடி: பெண்கள் உள்பட 4 பேர் கைது
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:13:59 AM (IST)








