» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை: தாய்க்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 3:25:43 PM (IST)
கல்லிடைக்குறிச்சியில் குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து சிறுமி பரிதாபமாக இறந்தாள். அவரது தாயும் தற்கொலைக்கு முயன்றார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொன்மாநகர் பகுதியில் சாலையோரம் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு பெண்ணும், அவருடைய மகளும் குதித்து தண்ணீரில் தத்தளித்தனர். இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து உடனே கிணற்றில் இறங்கி 2 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயையும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் அம்பை பண்ணை சங்கரையா நகரைச் சேர்ந்த சுந்தரராஜன் மனைவி ஜோதி (வயது 36), அவர்களுடைய மகள் ஆனி ரோஸ் (11) ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது.
மேலும் ஜோதியும், சுந்தர்ராஜனும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்ததாகவும், பின்னர் சுந்தர்ராஜன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுந்தர்ராஜனுக்கும், ஜோதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜோதி, மகள் ஆனி ரோசுடன் கல்லிடைக்குறிச்சி பொன்மாநகர் பகுதியில் சாலையோரம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்வதற்காக வந்துள்ளார்.
அங்கு முதலில் தனது மகளை குதிக்கும்மாறு கூறினார். தாயின் பேச்சைக் கேட்டு ஆனி ரோஸ் கிணற்றில் குதித்தாள். அதன்பின்னர் ஜோதி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தில் ஆனி ரோஸ் இறந்ததும் ெதரியவந்தது. கல்லிடைக்குறிச்சியில் குடும்ப தகராறில் தாயுடன் கிணற்றில் குதித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் அதிகாரி ஜாகிர் உசேன் படுகொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி
செவ்வாய் 18, மார்ச் 2025 5:21:35 PM (IST)

முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை : தினகரன் குற்றச்சாட்டு
செவ்வாய் 18, மார்ச் 2025 4:37:47 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:49:03 PM (IST)

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:40:59 PM (IST)

தரமான பொருட்களை வாங்குவதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: ஆட்சியர்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:31:03 PM (IST)

தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன்
செவ்வாய் 18, மார்ச் 2025 12:14:04 PM (IST)
