» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் ரூ.1.4 கோடியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் : ஆட்சியர் ஆய்வு!!
செவ்வாய் 25, ஜூன் 2024 12:38:11 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1.4 கோடி மதிப்பில் தோவாளை கால்வாய் நிரந்தரமாக சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கரி – தூவச்சி பகுதியில் நடைபெற்று வரும் தோவாளை சானல் நிரந்தர சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (25.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது தோவாளை ஊராட்சி ஒன்றியம் திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கரி - தூவச்சி பகுதி தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மணல் மூட்டைகள் அடுக்கி போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தோவாளை சானலினை நிரந்தரமாக சீரமைக்க வேண்டுமென விவசாயிகள், விவசாய சங்கங்கள், கால்வாய் பாசன விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் தோவாளை சானலினை சீரமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு இக்கோரிக்கையினை ஏற்று வெள்ள சேத பகுதிகளை நிரந்தரமாக மீட்டெடுக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.4 கோடி மதிப்பில் சுமார் 15 கி.மீ நீளத்தில் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தோவாளை சானலினை நிரந்தரமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை தரமானதாகவும், உறுதி தன்மையுடனும் அமைத்திட துறை சாரந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பணிகளை விரைந்து முடித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் பொறி.ஜோதிபாசு, தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், உட்கோட்ட அலுவலர் பொறி.கிங்ஸ்லி, விவசாய சங்க பிரதிநிதிகள் ராகிசன் முத்து, செண்பகசேகரன் பிள்ளை உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)

தமிழ்நாட்டில் 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
சனி 19, ஏப்ரல் 2025 12:42:11 PM (IST)

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:26:23 PM (IST)

அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி விலகல்: பொதுச் செயலாளர் அறிவிப்பு!
சனி 19, ஏப்ரல் 2025 12:13:34 PM (IST)

காவல் துறையினருக்கு வார விடுமுறை அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
சனி 19, ஏப்ரல் 2025 11:49:58 AM (IST)

நடிகர் பாபி சிம்ஹா கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்; டிரைவர் கைது, கார் பறிமுதல்!
சனி 19, ஏப்ரல் 2025 11:39:44 AM (IST)
