» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஈக்களின் பெருக்கத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் : சுகாதாரத்துறை அறிவுரைகள்!!
புதன் 12, ஜூன் 2024 5:40:08 PM (IST)
பருவநிலை மாற்றத்தால் ஈக்களினால் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்து சுகாதாரத்துறையின் அறிவுரைகள் வழங்கியுள்ளது.
தற்போது தென்மேற்கு பருவ மழைகாலம் தொடங்கி பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதுபோல் கோடைகாலத்தில் கிடைக்கும் பழவகைகளும் மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கப்பெறுகிறது. இச்சூழலில் தண்ணீர் ஆங்காங்கே தேங்குவதும் பொது மக்கள் பழங்களை உண்டு அவைகளின் கொட்டைகள் மற்றும் அழுகிய பழங்களை சுகாதாரமற்ற முறையில் பொதுவெளியில் வீசுவதனாலும் சுகாதாரக்கேடு உருவாகிறது.
இதன் மூலம் ஈக்களின் பெருக்கம் அதிகமாக காணப்பட்டு தொற்று நோய்கள் பரவ காரணமாகிறது. கழிப்பறையை பயன்படுத்திய பின்னரும் உணவு அருந்தும் முன்பும் ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். உண்பதற்கான உணவுகளை ஈ மொய்க்காதவண்ணம் நன்கு மூடி பாதுகாக்கவேண்டும். உணவு பரிமாறும் பாத்திரங்களை சோப்பு நீரினால் நன்றாக கழுவவேண்டும். காய்கறிகள் மற்றும் பழவகைகளை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிய பின்னரே சமைக்கவும் உட்கொள்ளவும் வேண்டும்.
நன்கு கொதிக்கவைத்து ஆறிய தண்ணீரையே குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளை தினமும் இரண்டுவேளை கிருமி நாசினி கொண்டு வீட்டின் தரையை சுத்தம் செய்யவேண்டும். அதுபோல் வீட்டின் சுற்றுபுறத்தில் தண்ணீர் தேங்காமலும் குப்பைகள் குவியாமலும் பராமரிக்கவேண்டும். ஏதேனும் நோயின் அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை சென்று உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று குமரி மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)

தமிழ்நாட்டில் 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
சனி 19, ஏப்ரல் 2025 12:42:11 PM (IST)

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:26:23 PM (IST)

அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி விலகல்: பொதுச் செயலாளர் அறிவிப்பு!
சனி 19, ஏப்ரல் 2025 12:13:34 PM (IST)

காவல் துறையினருக்கு வார விடுமுறை அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
சனி 19, ஏப்ரல் 2025 11:49:58 AM (IST)

நடிகர் பாபி சிம்ஹா கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்; டிரைவர் கைது, கார் பறிமுதல்!
சனி 19, ஏப்ரல் 2025 11:39:44 AM (IST)
