» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காப்பகத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளம்பெண் போக்சோவில் கைது
புதன் 12, ஜூன் 2024 11:07:02 AM (IST)
போடி அருகே குழந்தைகள் காப்பகத்தில் 10 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண்ணை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியில் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு போடி அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்த வரதராஜன் மனைவி முனீஸ்வரி (28) என்பவர் நிர்வாகியாக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தாயால் கைவிடப்பட்ட 3 குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
அதில் 10 வயது சிறுவன் இந்த காப்பகத்தில் தங்கி சில்லமரத்துப்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் சிறுவனிடம் விசாரித்தார். அப்போது காப்பக நிர்வாகி முனீஸ்வரி தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் கூறினான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமியிடம் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் அதிகாரிகள் காப்பகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவனுக்கு, காப்பக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் முனீஸ்வரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து , அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் அதிகாரி ஜாகிர் உசேன் படுகொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி
செவ்வாய் 18, மார்ச் 2025 5:21:35 PM (IST)

முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை : தினகரன் குற்றச்சாட்டு
செவ்வாய் 18, மார்ச் 2025 4:37:47 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:49:03 PM (IST)

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:40:59 PM (IST)

தரமான பொருட்களை வாங்குவதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: ஆட்சியர்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:31:03 PM (IST)

தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன்
செவ்வாய் 18, மார்ச் 2025 12:14:04 PM (IST)
