» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூருக்கு 50 பேர் புக் செய்தால் சிறப்பு பேருந்து: போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
புதன் 31, மே 2023 8:53:48 AM (IST)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இங்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக குமரி மாவட்டத்தின் எந்த ஊரில் இருந்தும் 50 பேர் சேர்ந்து புக் செய்தால் பேருந்து சேவை இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழக வணிக மேலாளர் ஜெரோலின் கூறுகையில், "வழக்கமாகவே கன்னியாகுமரி, நாகர்கோவில், திங்கள்சந்தை டிப்போக்களில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் 30 பேருந்துகள் இயக்குவது வழக்கம். வரும் 2-ம் தேதி, திருச்செந்தூரில் வைகாசி விசாகம் வருகின்றது. இதனால் வரும் ஜூன் 1-ம் தேதி காலை முதல், ஜூன் 3-ம் தேதிவரை தினமும் 100 பேருந்துகள் இந்த டிப்போக்களில் இருந்து இயக்கப்படும்.
இதேபோல் வைகாசி விசாகத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியில் இருந்தும், 50 பேர், அல்லது அதைவிட அதிகமானோர் திருச்செந்தூர் செல்லவிரும்பினால் அவர்கள் ஊரில் இருந்தே திருச்செந்தூர் அழைத்துச்செல்ல சிறப்புப் பேருந்துகள் விடப்படும். இதற்கு நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் முறையான விண்ணப்பம் வழங்கவேண்டும்.
இதில் அவர்கள் ஊரில் இருந்து திருச்செந்தூர் அழைத்துச் சென்று, தரிசனம் முடிந்ததும் மீண்டும் அவர்களது ஊருக்கே கொண்டுவந்து அரசுப்பேருந்தில் விடப்படும். இந்தப் பேருந்துகள் வழியில் யாரையும் ஏற்றாது. அதேபோல் தரிசனம் முடியும்வரைக் காத்திருந்து திரும்ப அழைத்துச் செல்வதால் இதற்கு ஒரு பயணிக்கு ஒன்றரைக் கட்டணம் வசூல் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவர், ஒண்டி வீரன் நினைவிடங்களில் ஆளுநர் மரியாதை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:34:28 PM (IST)

குமரி மாவட்டத்தில் அக்.2ம் தேதி கிராமசபைக் கூட்டம் ஆட்சியர் தகவல்!!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:32:44 PM (IST)

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு : முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 4:09:34 PM (IST)

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: 18 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:21:55 PM (IST)

பாரதத்தின் உந்து சக்தி விவசாயிகள்தான்: குற்றாலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
வியாழன் 28, செப்டம்பர் 2023 8:31:11 PM (IST)

திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:40:59 PM (IST)

MahaJun 1, 2023 - 03:37:42 PM | Posted IP 172.7*****