» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிரதமர் குறித்து தரக்குறைவாக விமர்சித்த பதிவை நீக்கினார் அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 30, மே 2023 5:04:07 PM (IST)
பிரதமர் குறித்து தரக்குறைவாக விமர்சித்த, அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கடும் கண்டனம் எழுந்ததை தொடர்ந்து, தன் பதிவை சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கினார்.
புதிய பார்லிமென்டில் நிறுவப்படுவதற்கு முன், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட செங்கோல் முன்பு, பிரதமர் மோடி விழுந்து வணங்கினார். இப்படத்தை, அமைச்சர் மனோ தங்கராஜ், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டு, 'மூச்சு இருக்கா... மானம்... ரோஷம்' என குறிப்பிட்டிருந்தார். மனோ தங்கராஜ், பிரதமர் குறித்து முகநூல் மற்றும் டுவிட்டரில் பதிவு செய்த கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.,துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, 'அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து அகற்றுவதோடு, கைது செய்து தகுந்த தண்டனை தர வேண்டியது, முதல்வரின் பொறுப்பு. இறைவனை வணங்க, இப்படி இருப்பதில் தவறில்லை.'உதவி கேட்க வந்தவர் களிடம் எப்படியோ இருக்க முயற்சித்ததாக செய்தி வந்தும், மானம், ரோஷம், வெட்கம், சூடு, சுரணை இல்லாமல் இன்னும் மூச்சு இருக்கிறதே' என, காட்டமாக கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்ட அறிக்கையில், 'பிரதமரை மத ரீதியாக புண்படுத்துகிறார். ஹிந்து மத நம்பிக்கையாளர்களின் மனம் புண்பட செய்கிறார். மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராக செயல்படுகிறார். 'பதவிப் பிரமாண உறுதிமொழியை காற்றில் பறக்க விட்டு விட்டார். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். கவர்னர் உடனடியாக, இதை முதல்வரின் பார்வைக்கு எடுத்து செல்ல வேண்டும்' என தெரிவித்துள்ளார். இதேபோல், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அமைச்சர் மனோ தங்கராஜ், தன் பதிவை நீக்கியுள்ளார்.
மக்கள் கருத்து
aiyyaமே 30, 2023 - 06:36:18 PM | Posted IP 172.7*****
mano thangaraj... arasiyal pannalam... ivvalavu keel thanama panna vendaam...
PODHU JANAMமே 30, 2023 - 09:23:34 PM | Posted IP 162.1*****