» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை-தென்காசி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்க அனுமதி
ஞாயிறு 19, மார்ச் 2023 7:58:44 AM (IST)
நெல்லை-தென்காசி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.
நெல்லையில் இருந்து சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் வழியாக தென்காசி வரை 72 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த வழித்தடத்தில் நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர், நெல்லை-பாலக்காடு, நெல்லை-மேட்டுப்பாளையம், நெல்லை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடம் மின்மயமாக்கப் பட்டு, வேகமாக ரயில்களை இயக்குவதற்கு வசதியாக தண்டவாளம் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் இந்த பாதையில் அதிவேக ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
மேலும் மின்சார ரயிலும் இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நெல்லை-தென்காசி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. வளைவு பகுதிகளில் மட்டும் வேகத்தை குறைத்து இயக்குமாறு கூறியுள்ள நிர்வாகம், அந்த இடங்களையும் குறிப்பிட்டு உள்ளது. இதையடுத்து இந்த பாதையில் ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு, ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் ரயில்கள் வந்து செல்லும் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு: 4 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது
சனி 1, ஏப்ரல் 2023 3:25:20 PM (IST)

குறைந்த விலையில், அதிவேக இணைய சேவை : தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்
சனி 1, ஏப்ரல் 2023 3:00:22 PM (IST)

விஜய் யேசுதாஸ் வீட்டில் ரூ.60 லட்சம் நகைகள் திருட்டு: தனிப்படை போலீசார் விசாரணை!
சனி 1, ஏப்ரல் 2023 12:09:57 PM (IST)

கோவில்பட்டி உட்பட 8 புதிய மாவட்டங்களை உருவாக்க திட்டம் : அமைச்சர் தகவல்..!
சனி 1, ஏப்ரல் 2023 11:51:17 AM (IST)

ரயிலில் அடிபட்டு தந்தை-குழந்தை பலி : விபத்தா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!!
சனி 1, ஏப்ரல் 2023 11:26:53 AM (IST)

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தூத்துக்குடி ஆசிரியை திடீர் மரணம்
சனி 1, ஏப்ரல் 2023 10:45:27 AM (IST)
