» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எய்ம்ஸ் ஆரம்ப கட்ட பணிதான் 95% முடிந்ததாக ஜே.பி.நட்டா கூறினார் - எல்.முருகன் விளக்கம்
சனி 24, செப்டம்பர் 2022 12:29:23 PM (IST)
எய்ம்ஸ் ஆரம்ப கட்ட பணிதான் 95% முடிந்ததாகத்தான் ஜே.பி.நட்டா கூறியதாக மத்திய அமைச்சர் எல் முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டதாக கூறியதாக தகவல் வெளியானது. இதனால் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்துக் கொள்ளப்பட வில்லை.எய்ம்ஸ் ஆரம்பகட்ட பணிகள் 95% முடிந்தது என்று தான் ஜெ.பி நட்டா கூறினார். அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர்" என்றார்.
மக்கள் கருத்து
ARASAMUTHUSep 24, 2022 - 12:40:58 PM | Posted IP 162.1*****
L. MURUGAN மாதிரி அறிவாளிகள் எல்லாரும் உங்க கட்சியில் தான் இருக்கிறீர்கள்.
ராமநாதபூபதிSep 24, 2022 - 04:54:13 PM | Posted IP 162.1*****