» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்திற்கு வருகிற 24ம் தேதி வேலைநாள் : ஆட்சியர் அரவிந்த் அறிவிப்பு
சனி 10, செப்டம்பர் 2022 12:24:43 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற 24ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டது.
அதற்கு ஈடுசெய்யும் விதமாக 10.09.2022 அன்று வேலை நாள் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக செப்டம்பர் திங்கள் நான்காவது சனிக்கிழமை அதாவது 24.09.2022 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக் கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், உத்தரவிட்டுள்ளார்கள்.