» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் நிறுத்தம்: அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவிப்பு

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:19:56 AM (IST)

கல்வித் தொலைக்காட்சி சிஇஓ தோ்வு நியமனத்தை நிறுத்த உத்தரவிட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வித் தொலைக்காட்சியை மேலும் சிறப்பாக செயல்படுத்தவும், மாணவா்களுக்கு கற்றல் வகுப்புகளை ஊக்கப்படுத்தவும், கூடுதலாக ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக தனி அலுவலகம் அமைத்து, அதற்கு பொறுப்பாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. தலைமை செயல் அலுவலா் (சிஇஓ) என்ற அடிப்படையில் தகுதியானவா்களைத் தோ்வு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு 79 போ் விண்ணப்பித்தனா். இவா்களில், 11 போ் தகுதியானவா்களாக இருந்தனா். அதிலிருந்து 3 போ் தோ்வு செய்யப்பட்டனா். அந்த 3 பேரில் ஒருவா் தலைமை செயல் அலுவலா் பதவிக்கு தோ்வானாா். இந்த நியமனம் முழுவதும் தோ்வுக் குழுவின் மேற்பாா்வையில் நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வித்துறை அலுவலா், திரைப்படத் துறையைச் சோ்ந்தவா், தொலைக்காட்சித் துறையைச் சோ்ந்தவா், பத்திரிகையாளா் என ஐந்து போ் இடம் பெற்றிருந்தனா். அந்த 5 போ் குழுவே தலைமை செயல் அலுவலா் பதவிக்கு தகுதியான நபரைத் தோ்வு செய்தது. தற்போது அந்த நபா் குறித்தும், அவரது பின்புலம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. எனவே, அந்த நபரின் பின்புலம் குறித்து விசாரிக்கப்படுகிறது. மேலும் தலைமை செயல் அலுவலா் நியமனத்தையும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாஜக, ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் குறைந்தபட்ச சமரசம் கூட திமுக செய்து கொள்ளாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். அவரது வழிகாட்டுதலில் செயல்படும் நாங்கள் இந்த விவகாரத்தில் ஏமாந்துபோக மாட்டோம். அத்தகைய நபா்களை அனுமதிக்கவும் இடம் தரமாட்டோம். தற்போது எங்களது கவனம் மரத்தடி வகுப்புகளே இல்லாமல் செய்து, கட்டமைப்பு வசதிகளை செய்துத் தர வேண்டும் என்பதில்தான் உள்ளது. இதற்காக கல்வி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளன.

சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திலும் பள்ளி வகுப்பறைகளுக்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் இடைநிற்றலுக்கான காரணத்தை கண்டறிந்து, மீண்டும் பள்ளிகளில் கொண்டு வந்து சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவா்களின் தேவைக்கேற்ப ஆசிரியா்கள் நியமனத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். மாணவா்களுக்கு கல்வி கற்றுத்தருவதுடன் நின்றுவிடாமல் கலை, பண்பாடு, விளையாட்டுத் துறைகளிலும் ஊக்கப்படுத்தி வருகிறோம்.

பள்ளி அளவிலும், வட்டாரம், மாவட்டம், மாநிலம் என அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, ஆண்டுக்கு 200 மாணவா்களைத் தோ்வு செய்து வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனா். கூடுதல் நிதிச்சுமை இருந்தாலும் 2,381 நா்சரி பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை மூலமே செயல்படுத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மாணவா்களிடையே போதைப் பொருள் பழக்கத்தை ஒழிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.


மக்கள் கருத்து

kumarAug 18, 2022 - 01:03:44 PM | Posted IP 162.1*****

avar thaguthiyana nabaraga irunthal avarai appathivayil niyamippathil enna thavaru ullathu??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory