» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு மருத்துவமனைகளில் நுண்கதிர்வீச்சாளர். உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
புதன் 17, ஆகஸ்ட் 2022 5:24:29 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள நுண்கதிர்வீச்சாளர், பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தென்காசி மாவட்டம், இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள நுண்கதிர்வீச்சாளர் பணியிடம் மற்றும் ஆய்குடி, புளியங்குடி அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவ உதவியாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேற்படி நுண்கதிர்வீச்சாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் CRA, DRDT கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஒரு வருடம் பல் மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்தமைக்கான அனுபவம் (சான்றிதழ்) பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் 24.08.2022 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/தபால் மூலமாகவோ இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், (தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம்), தென்காசி – 627 811 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாலை 5 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.