» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் குளத்தில் குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை!
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 11:28:53 AM (IST)
அச்சன்புதூர் அருகே அடிக்கடி செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் குளத்தில் குதித்து 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே உள்ள பண்பொழி பிட்டு தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மகள் கற்பகவல்லி (17). இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கற்பகவல்லி படிப்பில் சரிவர கவனம் செலுத்தாமல் தொடர்ந்து செல்போனில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்துள்ளார்.
இதனால் கற்பகவல்லி தனது தாயிடம் தகராறு செய்து கோபித்துக் கொண்டு அருகில் உள்ள பெரிய குளத்துக்கு சென்று தண்ணீரில் குதித்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் அச்சன்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கற்பகவல்லியின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.