» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம்: தமிழக வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 8:53:17 AM (IST)
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் வீரமரணம் செய்தி கேட்டு வேதனையுற்றேன். அவருடன் வீரமரணம் அடைந்த 3 ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி மற்றும் வீரவணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன். மேலும் தமிழக வீரர் லட்சுமணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்து உள்ளார்.